
கோவை: சவுக்கு சங்கர் மீதான வழக்கில் குற்றப்பத்திரிகை தயாரிப்பில் சைபர் க்ரைம் போலீஸ் தீவிரம் காட்டி வருகின்றனர்.
கோவை மாநகர சைபர் க்ரைம் போலீஸில், உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்தவர் சுகன்யா. இவர், கடந்தாண்டு மே மாதம் கோவை மாநகர சைபர் க்ரைம் போலீஸாரிடம் புகார் அளித்தார். அதில், ‘‘சென்னையைச் சேர்ந்த யுடியூபரான சவுக்கு சங்கர், பெண்கள் காவலர்கள் குறித்தும், காவல்துறை உயரதிகாரிகள் குறித்தும் அவதூறாக பேசியுள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ எனக் கூறப்பட்டிருந்தது.