• June 13, 2025
  • NewsEditor
  • 0

மேலக்​கோட்​டையூர் ஊராட்​சிக்கு உட்​பட்ட காவலர் குடி​யிருப்பு அருகே உள்ள பூங்​காவை பராமரித்து மக்​கள் பயன்​பாட்​டுக்கு கொண்டு வர வேண்​டும் என கோரிக்கை எழுந்​துள்​ளது. செங்​கல்​பட்டு மாவட்​டம் திருப்போரூர் ஒன்​றி​யம் மேலக்​கோட்​டையூர் ஊராட்சி காவலர் குடி​யிருப்பு அருகே சிறு​வர் பூங்கா அமைக்​கப்​பட்​டுள்​ளது. தொடக்​கத்​தில் பயன்​பாட்​டில் இருந்து வந்த இந்த சிறு​வர் பூங்​கா​வில், நாளடை​வில் முறை​யான பராமரிப்பு இல்​லாமல் போனது. போதிய பாது​காப்பு வசதி இல்​லாத காரணத்​தால், பயன்​படுத்​துபவர்​களின் எண்​ணிக்கை குறைந்​துள்​ளது.

தற்​போது பூங்​கா​வில் முட்​புதர்​கள் வளர்ந்து காடு​போல் உள்​ளது. பெரும்​பாலான விளை​யாட்டு உபகரணங்​கள் சேதமடைந்​துள்​ளன. பராமரிப்​பின்றி இருப்​ப​தால் அப்​பகுதி மக்​கள் அவதிப்பட்டு வரு​கின்​றனர். வயதானோர் நடைப​யிற்சி செய்​யும் பாதை முழு​வதும் புதர் மண்டி கிடக்​கிறது. பூங்​காவை முறை​யாக பராமரிக்​காத​தால் சிறு​வர்​கள் விளை​யாடக்​கூடிய அனைத்து உபகரணங்​களும் துருப்பிடித்​து, உடைந்​து, பாழடைந்து பயன்​படுத்த முடி​யாத நிலை​யில் உள்ளன.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *