
எடப்பாடி அருகே சிறுவனை வளர்ப்பு நாய்கள் விரட்டி கடிக்கும் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
எடப்பாடி கவுண்டம்பட்டியில் வீட்டில் வளர்க்கும் நாய்கள் வெறிபிடித்து வீதியில் செல்லும் குழந்தைகளை விரட்டி விரட்டி கடித்துள்ளன. இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவர் எடப்பாடி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், குழந்தைகளை விரட்டி கடிக்கும் நாய்களை வீட்டில் கட்டிப் போட்டு வளர்க்க வேண்டும் என உரிமையாளர்களுக்கு போலீஸார் அறிவுறுத்தினர். இந்நிலையில் நாய்களை கட்டிப் போட்டு வளர்க்காததால் வீதியில் செல்லும் குழந்தைகளை விரட்டி விரட்டி நாய்கள் கடித்துள்ளன.