
சென்னை: புதிய விதிகளின்படி ஆன்லைன் மூலம் தட்கல் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்ய ஆதார் இணைப்பு கட்டாயம் எனும் விதி நடைமுறைக்கு வந்துள்ளது. இதன்படி ஐஆர்சிடிசி கணக்குடன் ஆதாரை இணைப்பது எப்படி என்று பார்ப்போம்…
தட்கல் டிக்கெட் முறையின் பலனை பொதுமக்கள் பெறுவதை உறுதி செய்வதற்கும், முகவர்களின் முறைகேடுகளைத் தடுப்பதற்கும், ரயில்வே அமைச்சகம் இந்தத் திட்டத்தைத் திருத்தியுள்ளது, இதில் ஆதார் மூலம் அங்கீகரிக்கப்பட்ட பயனர்கள் மட்டுமே ஜூலை 1 முதல் IRCTC இன் அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது மொபைல் செயலி மூலம் தட்கல் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய முடியும்.