
மேட்டூர்: காவிரி டெல்டா பாசனத்துக்காக, மேட்டூர் அணையிலிருந்து முதல்வர் ஸ்டாலின் நேற்று தண்ணீரை திறந்து வைத்தார்.
டெல்டா பாசனத்துக்காக மேட்டூர் அணையிலிருந்து ஜூன் 12-ல் தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். நடப்பாண்டு அணையில் போதிய தண்ணீர் இருப்பு உள்ளதால், அணையிலிருந்து ஜூன் 12-ல் தண்ணீர் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது.