
அகமதாபாத்: அகமதாபாத் விமான நிலையத்தின் அருகில் இன்று விமானம் விபத்துக்குள்ளான நிலையில், ஏர் இந்தியா நிறுவனம் சமூக ஊடக தளங்களில் தனது சுயவிவரப் படத்தை கருப்பு வண்ணத்தில் மாற்றியுள்ளது.
அகமதாபாத் சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து பிரிட்டன் தலைநகர் லண்டன் நோக்கி மதியம் 1:38 மணிக்கு புறப்பட்ட விமானம், 5 நிமிடங்களுக்குப் பிறகு விபத்துக்குள்ளானது. ஏர் இந்தியாவுக்குச் சொந்தமான போயிங் 787-8 ட்ரீம்லைனர் விமானம், விமான நிலையத்துக்கு அருகே உள்ள குடியிருப்புப் பகுதியில் விமானம் விழுந்து விபத்துக்குள்ளானது. 230 பயணிகள், 12 பணியாளர்கள் என 242 பேர் இந்த விமானத்தில் பயணித்தனர்.