• June 13, 2025
  • NewsEditor
  • 0

வருசநாடு அருகே மண்ணூத்து மலை கிராமத்தில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு சமுதாயக்கூட திறப்பு விழா நடைபெற்றது. ரூ.28 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட இந்த கட்டிடத்தை ஆண்டிபட்டி எம்எல்ஏ ஆ.மகாராஜன் திறந்து வைத்தார்.

அப்போது அவர் பேசுகையில், தேர்தலில் கூறிய பல வாக்குறுதிகளை திமுக நிறைவேற்றியுள்ளது. நான் இங்கு எம்எல்ஏ ஆன பிறகு நன்கு மழை பெய்கிறது. பல நலத்திட்டங்களை செயல்படுத்தி இருக்கிறேன். பாலைவனமாக இருந்த பகுதி தற்போது சோலைவனமாக மாறிவிட்டது. இங்குள்ள கிராம பெண்கள் ஆண்களுக்கு இணையாக வேலை செய்து குடும்பத்தை காப்பாற்றி வருகிறீர்கள். எனவே வேலை முடிந்ததும் 'ஓசி' பஸ்சில் ஏறி ஆண்டிபட்டி, உசிலம்பட்டி, தேனிக்கு ஜாலியாக சென்று வாருங்கள். உங்கள் கணவர் வீட்டில் உங்களுக்காக சமைத்து வைப்பார், என்றார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *