• June 13, 2025
  • NewsEditor
  • 0

குஜராத்தின் அகமதாபாத் விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட விமானம் விபத்துக்குள்ளாகியிருக்கிறது.

அஹமதாபாத் ஏர்போர்ட்

குஜராத்தின் தலைநகரான அகமதாபாத் விமான நிலையத்திலிருந்து மதியம் 1:17 மணியளவில் புறப்பட்ட AI 171 – 787 என்ற எண் கொண்ட லண்டணுக்குச் செல்லும் ஏர் இந்தியா விமானம் சில நொடிகளிலேயே திடீரென விபத்துக்குள்ளாகியிருக்கிறது.

விபத்தில் சிக்கிய விமானத்தில் 242 பயணிகள் இருந்ததாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. விபத்துக்குள்ளான இடத்தில் வானுயர கரும்புகை சூழ்ந்திருக்கும் நிலையில் மீட்பு நடவடிக்கைகள் தொடங்கியிருப்பதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது.

242 பயணிகளுடன் புறப்பட்ட ஏர் இந்தியா போயிங் 787 ரக விமானம் விமான நிலையத்துக்கு அருகிலுள்ள மெஹானி என்கிற குடியிருப்புப் பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளாகியிருக்கிறது.

இது சம்பந்தமாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா குஜராத்தின் முதலமைச்சர் மற்றும் உள்துறை அமைச்சருடன் ஆலோசனையில் ஈடுபட்டு வருவதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.

அகமதாபாத்திலிருந்து லண்டணின் காட்விக் விமான நிலையத்துக்குப் புறப்பட்ட AI 171 என்ற விமானம் விபத்தில் சிக்கியதாக ஏர் இந்தியா நிறுவனம் உறுதிப்படுத்தியிருக்கிறது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3PaAEiY

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *