
கடலூர் பேருந்து நிலையத்தில், முதல்வர் திறந்து வைத்த சிறப்பு நூலகம் மறுநாளே வெறிச்சோடி கிடக்கிறது. அங்கு அரசால் வைக்கப்பட்ட நூலகத்துக்கான அறிவிப்பு மட்டுமே காட்சிப் பொருளாக இருக்கிறது.
‘மக்கள் அதிகம் கூடும் இடங்களில் நேரத்தை பயனுள்ளதாக பயன்படுத்தும் வகையில் சிறப்பு நூலகங்கள் அமைக்கப்படும்’ என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். அறிவித்தபடியே மாவட்ட அரசு மருத்துவ மனைகள், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், பேருந்து நிலையங்கள் என தமிழகத்தில் பொதுமக்கள் கூடும் 70 இடங்களைத் தேர்வு செய்து, இந்த சிறப்பு நூலகங்களை காணொலி வழியாக நேற்று முன்தினம் முதல்வர் திறந்து வைத்தாா்.