
திருவாரூர்: தமிழக முதல்வர் ஸ்டாலின், நேற்று ஈரோட்டில் நடைபெற்ற விழாவில் பேசும்போது, “நாங்கள் ஒன்றும் பச்சைத் துண்டு போட்ட போலி விவசாயிகள் அல்ல” என்று கூறியிருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள தமிழக காவிரி விவசாயிகள் சங்கப் பொதுச் செயலாளர் பிஆர்.பாண்டியன், “பச்சைத் துண்டுபோட்ட போலி விவசாயி யார்-?” “பச்சைத் துண்டுபோட்டால் போலி விவசாயியா?” எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுதொடர்பாக மன்னார்குடியில் இன்று (ஜூன் 12) செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது. “முதல்வர் ஸ்டாலின், மத்திய அரசின் ஆத்மா திட்டத்தின் நிதியை பயன்படுத்தி, ஈரோட்டில் விவசாயிகள் கருத்தரங்கம், கண்காட்சி என்கிற பெயரில் போலி நாடகத்தை அரங்கேற்றியுள்ளார். பாதிக்கப்படும் விவசாயிகளுக்காக குரல் கொடுக்கும் பச்சைத்துண்டு விவசாயிகள் மீது புழுதி வாரி தூற்றியுள்ளார்.இது கண்டிக்கத்தக்கது. முதல்வர் ஸ்டாலின் ஆட்சியின் அலங்கோலத்தால் விவசாயிகள் படும் துன்பங்களை பட்டியலிட்டு வெளி உலகுக்கு எடுத்துரைத்தால் போலி பட்டம் கொடுக்க முயற்சிப்பீர்களா?