
கோவை: “அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தில் பாதிக்கப்பட்ட மாணவி தரப்பை மேல்முறையீடு செய்ய அறிவுறுத்தியுள்ளேன்,” என்று பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
கோவை அவிநாசி சாலையில் உள்ள தனியார் ஓட்டலில் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை இன்று (ஜூன் 12) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: “பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான கடந்த 11 ஆண்டு கால ஆட்சியில் என்ன வாக்குறுதிகள் அளித்தோம். அவற்றை எவ்வாறு நிறைவேற்றி உள்ளோம் என்பதை மக்களிடம் தெரிவிக்கவே இந்நிகழ்வு. 2014-ம் ஆண்டு தேர்தல் வாக்குறுதிகளை படித்து பாருங்கள் என நாங்கள் கூறுகிறோம்.