
திண்டுக்கல்: “திமுக கூட்டணியில் இருந்து கட்சிகள் விலகும் என்பது பகல் கனவு,” என்று அமைச்சர் ஐ.பெரியசாமி கூறியுள்ளார்.
திண்டுக்கல் அருகே ஆத்தூர் தொகுதிக்குட்பட்ட சீவல்சரகு கிராமத்தில் ‘கலைஞரின் கனவு இல்ல’ திட்ட பயனாளிகளுக்கு பணி ஆணை வழங்கும் நிகழ்ச்சி இன்று (ஜூன் 12) நடைபெற்றது. பயனாளிகள் 431 பேருக்கு வீடுகள் கட்டுவதற்கான பணி உத்தரவை வழங்கி அமைச்சர் ஐ.பெரியசாமி பேசினார். நிகழ்ச்சியின் முடிவில் செய்தியாளர்களிடம் அமைச்சர் ஐ.பெரியசாமி கூறியது: “திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் அதிக இடங்கள் வேண்டும் என கேட்பது அவர்களது உரிமை. கம்யூனிஸ்ட் கட்சியினர் போர்க்கொடி தூக்கவில்லை, மிரட்டவில்லை அவர்களின் உரிமையை கேட்கின்றனர்.