• June 12, 2025
  • NewsEditor
  • 0

அகமதாபாத்: அகமதாபாத் நகரில் இன்று ஏற்பட்ட ஏர் இந்தியா விமான விபத்தில் காயமடைந்து சிகிச்சையில் உள்ளவர்களின் உயிரை காக்க ரத்த தானம் செய்யுமாறு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது அகில இந்திய மருத்துவ சங்க கூட்டமைப்பு (FAIMA).

இது தொடர்பாக அந்த கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், “விமான விபத்து காரணமாக காயமடைந்த பி.ஜி மருத்துவக் கல்லூரியை சேர்ந்த சுமார் 60 எம்பிபிஎஸ் மாணவர்கள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் மூவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மற்றவர்களின் உடல்நலன் சீராக உள்ளது. 4 முதல் 5 மாணவர்களை காணவில்லை.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *