
அகமதாபாத்: அகமதாபாத் விமான விபத்தில் குஜராத் மாநில முன்னாள் முதல்வர் விஜய் ரூபானியும் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. விபத்தில் சிக்கி அவர் உயிரிழந்த தகவலை மத்திய அமைச்சர் சி.ஆர் பாட்டீல் உறுதி செய்துள்ளார். தனது மகளை சந்திக்க அவர் இன்று மதியம் லண்டன் புறப்பட்டதாக தகவல். பிசினஸ் கிளாஸ் பிரிவில் அவர் விமானத்தில் பயணித்தார்.
68 வயதான அவர், குஜராத் மாநிலத்தின் 16-வது முதல்வராக கடந்த 2016 முதல் 2021 வரையில் பொறுப்பு வகித்தார். தற்போதைய குஜராத் முதல்வர் பூபேந்திர படேலுக்கு வாய்ப்பு வழங்கும் வகையில் தனது பதவியில் இருந்து அவர் விலகினார். ஆர்எஸ்எஸ் அமைப்பின் மாணவர் அணியான அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத்தில் (ஏபிவிபி) இருந்து தனது அரசியல் பயணத்தை தொடங்கியது.