
அகமதாபாத்: குஜராத்தின் அகமதாபாத்தில் இருந்து பிரிட்டன் நாட்டின் லண்டனுக்கு புறப்பட்ட விமானம் டேக் ஆஃப் ஆன சில நிமிடங்களில் விபத்துக்குள்ளானது. இந்நிலையில், இந்த விபத்தை நேரில் பார்த்த ஒருவர் அந்த அதிர்ச்சி சம்பவத்தை விவரித்துள்ளார்.
“மதியம் நான் வீட்டில் இருந்தேன். அப்போது திடீரென பலத்த சப்தம் கேட்டது. அது ஏதோ பயங்கரமான வெடி விபத்து போல இருந்தது. முதலில் பூகம்பமாக இருக்கும் என நான் நினைத்தேன். தொடர்ந்து என்னவென்று பார்க்க வீட்டில் வெளியே வந்தேன். வானுயர கரும்புகை எழுந்திருந்ததை பார்த்தேன். பின்னர் வீட்டில் இருந்து இங்கு வந்து பார்த்தபோது விபத்தில் சிக்கிய விமானத்தின் சிதறிய பாகங்கள் மற்றும் உயிரிழந்தவர்களின் உடல்கள் இருந்தன. அது மிகவும் அதிர்ச்சி அளித்தது” என அவர் கூறியுள்ளார்.