• June 12, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: மாநிலங்களவை உறுப்பினர்களாக மநீம தலைவர் கமல்ஹாசன், திமுகவின் வில்சன், கவிஞர் சல்மா, சிவலிங்கம், அதிமுகவின் இன்பதுரை மற்றும் தனபால் ஆகிய 6 பேரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதுடன், அதற்கான சான்றிதழையும் பெற்றுக் கொண்டனர்.

தமிழகத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்வானவர்களில் 6 பேரின் பதவிக்காலம் அடுத்த மாதம் முடிவடைகிறது. இதையடுத்து, அந்த 6 இடங்களுக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டு, தேர்தல் நடத்தும் அதிகாரியாக தமிழக சட்டப்பேரவை செயலக கூடுதல் செயலர் சுப்பிரமணியம், உதவி தேர்தல் நடத்தும் அதிகாரியாக இணை செயலர் ரமேஷ் ஆகியோர் நியமிக்கப்பட்டனர். எம்எல்ஏக்கள் பலத்தின் அடிப்படையில் திமுக சார்பில் 4 பேரும், அதிமுக சார்பில் 2 பேரும் போட்டியிட்டனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *