• June 12, 2025
  • NewsEditor
  • 0

அகமதாபாத்: குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் இருந்து பிரிட்டன் நாட்டின் லண்டனுக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமான நிறுவனத்துக்கு சொந்தமான போயிங் 787-8 ரக விமானம் விபத்தில் சிக்கியது. இந்நிலையில், 1988-ல் அகமதாபாத்தில் ஏற்பட்ட விமான விபத்தை நினைவுப்படுத்தும் வகையில் இது அமைந்துள்ளது.

கடந்த 1988-ல் விபத்தில் சிக்கியது இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான போயிங் 737 ரக விமானம். 1988 அக்டோபர் 19-ம் தேதி அன்று மும்பையில் இருந்து அகமதாபாத்துக்கு வந்த அந்த விமானம் விபத்தில் சிக்கியது. இதில் பயணிகள் மற்றும் விமான பணியாளர்கள் என 133 பேர் உயிரிழந்தனர். இது தேசத்தில் நடந்த மிக மோசமான விமான விபத்துகளில் ஒன்று.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *