
Ahmedabad Plane Crash
குஜராத் மாநிலம், தலைநகர் அஹமதாபாத் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட விமானம் விபத்துக்கு உள்ளாகியிருக்கிறது.
அஹமதாபாத்தில் இருந்து லண்டன் புறப்பட்ட AI 171 – 787 என்ற எண் கொண்ட ஏர் இந்தியாவின் போயிங்-787 ட்ரீம்லைனர் விமானம், மதியம் சரியாக1:39 மணிக்குப் புறப்பட்டுள்ளது.
புறப்பட்ட சில நிமிடங்களிலேயே கீழே விழுந்து சிதறியது. விபத்து நடந்த இடத்தில் வானுயர கரும்புகை எழுந்துள்ளது.
விமான விபத்து பற்றிய புகைப்படங்கள், வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.
#BREAKING : Exclusive footage of Vijay Rupani Boarding Pass.
Ex Gujarat CM Vijay Rupani was on crashed Air India Plane in Ahmedabad.#Ahmedabad #Gujarat #PlaneCrash #Crash #AI171 #AirIndia #VijayRupani pic.twitter.com/gZ5RYkepyD
— upuknews (@upuknews1) June 12, 2025
9,300 மணி நேரம் விமானத்தில் பறந்த அனுபவம்
விமானத்தை கேப்டன் சுமீத் சபர்வால் மற்றும் முதல் அதிகாரி கிளைவ் குந்தர் இயக்கியதாக சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (DGCA) தெரிவித்துள்ளது. இந்த இரு அதிகாரிகளின் அனுபவத்தையும் சேர்த்து 9,300 மணிநேரம் விமானமத்தில் பறந்திருக்கின்றனர்.
கேப்டன் சபர்வாலுக்கு 8,200 மணிநேர விமானப் பயண அனுபவம் இருந்தது. அவரது துணை விமானியான கிளைவ் குந்தர் 1,100 மணி நேரம் அனுபவம் பெற்றிருந்தார் என சிவில் விமானப் போக்குவரத்து ஒழுங்குமுறை அமைப்பான DGCA -வின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடைசி நேரத்தில் நடந்தது என்ன?
625 அடி உயரத்தில் பறந்துகொண்டிருந்த விமானம், நிமிடத்துக்கு 475 அடி வேகத்தில் சரிந்துள்ளதது. அங்கிருந்து ஒரு நிமிடத்துக்குள்ளாக கீழே விழுந்து குடியிருப்பு கட்டடம் ஒன்றில் மோதி வெடித்துச் சிதறியதால் விமானிகளுக்கு எவ்வித பாதுகாப்பு முயற்சிகளையும் மேற்கொள்ள போதுமான வேகம் இருந்திருக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு மையத்துக்கு விமானத்தில் இருந்து ‘உயிருக்கு ஆபத்தான சூழலில், அவசராக உதவிக்காக எழுப்பப்படும் மேடே (MAYDAY) சிக்னல்’ வந்திருக்கிறது. ஆனால் அதன் பிறகு விமானத்தை தொடர்புகொள்ள மேற்கொண்ட அனைத்து முயற்சிகளும் தோல்வியடந்ததாக விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு மையம் கூறியிருக்கிறது.