• June 12, 2025
  • NewsEditor
  • 0

ஜப்பானின் டோக்கியோவில் தனது மகனை, மக்கள் அடையாளம் காண வேண்டுமென்று நகரம் முழுவதும் சிறுவனின் புகைப்படத்தை அவரின் தந்தை காட்சிப்படுத்தியுள்ளார். இதற்காக அவர் 6 கோடி வரை செலவு செய்துள்ளார்.

டோக்கியோவில் ரியல் எஸ்டேட் நிறுவனம் நடத்தி வரும் ஒருவர் தனது மகனின் குழந்தை பருவ புகைப்படங்களை நகரம் முழுவதும் விளம்பரப்படுத்த 100 மில்லியன் யென் ( இந்திய மதிப்பில் கிட்டத்தட்ட ஆறு கோடி) செலவிட்டுள்ளார்.

இதுகுறித்து சிறுவனின் தந்தை தி சவுத் சைனா மார்னிங் போஸ்ட் இடம் கூறியதாவது

“என் மகன் குழந்தையாக இருந்த போது, மிகவும் அழகாக இருந்தான். தற்போது அவனுக்கு 16 வயது. டோக்கியோவில் உள்ள அனைவரும் இதை அறிந்திருக்க வேண்டும் என்று நான் நினைத்தேன்.

அதனால் எனது குழந்தை முகங்கள் கொண்ட விளம்பரங்களை நகரம் முழுவதும் காட்சிப்படுத்தினேன்.. இவ்வாறு செய்தால் ஆயிரக்கணக்கானோர் என் மகனை அடையாளம் காண்பார்கள்” என்று கூறியிருந்தார்.

ஆனால் இவ்வாறு செய்வது அந்த சிறுவனுக்கு பிடிக்கவில்லை என்றும் உண்மையில் நான் அழகாய் இருக்கிறேன் என்று நினைத்தால், அவர் செலவு செய்த தொகையை எனது வங்கி கணக்கில் செலுத்தி இருக்கலாம் என்று அவரது மகன் தந்தையிடம் கேட்டதாகவும் கூறியிருந்தார்.

தனது மகனின் அழகைக் கொண்டாடவும், தனது ரியல் எஸ்டேட் தொழிலை மேம்படுத்தவும் இந்த விளம்பரத்தை அவர் செய்ய முடிவு செய்திருக்கிறார். அதாவது அந்த சிறுவனின் புகைப்படங்கள் இப்போது அவரது தந்தையின் நிறுவனத்தை விளம்பரப்படுத்தும் வாசகங்கள் மற்றும் லோகோக்குளுடன் இடம்பெறுகிறது.. அந்த சிறுவனை புகைப்படம் எடுக்க ஒரு புகைப்பட கலைஞரையும் அவர் பணியமர்த்தியுள்ளார்.

தனது மகனை மக்கள் அறிய வேண்டும் என்று ஆறு கோடி வரை செலவு செய்தது பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *