• June 12, 2025
  • NewsEditor
  • 0

கும்பகோணத்தில் தனது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் நேற்று ஆய்வுக்கு சென்ற கவுன்சிலரை நாய்கள் விரட்டி கடித்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கும்பகோணம் மாநகராட்சி 14-வது வார்டு கவுன்சிலராக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அய்யப்பன்(73) உள்ளார். தாராசுரத்தில் வசித்து வரும் இவர், நாள்தோறும் தனது வார்டு பகுதியில் ஆய்வு மேற்கொள்வது வழக்கம். அதன்படி, அய்யப்பன் தனது வார்டுக்கு உட்பட்ட கணபதி நகரில் நேற்று காலை வழக்கம்போல ஆய்வுக்காக சென்று கொண்டிருந்தார். அப்போது, அந்தப் பகுதியில் சுற்றித் திரிந்த 10-க்கும் மேற்பட்ட நாய்கள் குரைத்தவாறு அவரை சூழ்ந்தன. இதனால், அதிர்ச்சியடைந்த அவர், நாய்களிடம் இருந்து தப்பிக்க, அங்கிருந்து ஓடத் தொடங்கினார். ஆனால், நாய்களும் விடாமல் அவரை விரட்டின. இதில், அவரது பின்னால் வேகமாக வந்த நாய் ஒன்று, அய்யப்பன் காலை கடித்தது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *