• June 12, 2025
  • NewsEditor
  • 0

குஜராத்தின் அகமதாபாத் விமான நிலையத்திலிருந்து லண்டனுக்குப் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகியிருக்கிறது.

அந்த விமானத்தில் குஜராத்தின் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானியும் பயணித்ததாகச் செய்திகள் வெளியாகியிருக்கிறது.

Ahmedabad Airplane Accident

அகமதாபாத் விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட AI 171 என்ற எண் கொண்ட போயிங் 787 ரக விமானத்தில், விமான குழுவினரோடு சேர்த்து மொத்தமாக 242 பேர் பயணித்திருக்கிறார்கள்.

தங்களின் விமானம் விபத்துக்குள்ளாகியிருப்பதாக ஏர் இந்தியா நிறுவனமும் தங்களின் X பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது.

மத்திய உள்துறை அமைச்சரான அமித்ஷா குஜராத்தின் முதல்வர் மற்றும் உள்துறை அமைச்சருடன் இந்த விபத்து பற்றி ஆலோசனையில் ஈடுபட்டிருப்பதாகச் செய்திகள் வெளியாகியிருக்கிறது.

Vijay Rupani
Vijay Rupani

அகமதாபாத்தின் விமான நிலையத்துக்கு அருகிலுள்ள மெஹானி எனும் குடியிருப்புப் பகுதியில் விமானம் விழுந்து நொறுங்கியிருக்கிறது.

லண்டனின் காட்விக்கை நோக்கிப் புறப்பட்ட இந்த விமானத்தில் பா.ஜ.க-வைச் சேர்ந்த குஜராத்தின் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானியும் பயணித்ததாக Economic Time, Gujart TV 9 போன்ற நிறுவனங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3PaAEiY

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *