
மதுரை: உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மாற்றுத்திறனாளிகள், முதியோர்கள், பெண்கள் வசதிக்காக பேட்டரி கார் சேவை தொடங்கப்பட்டுள்ளது.
உயர் நீதிமன்ற மதுரை அமர்வுக்கு பேருந்தில் வருபவர்கள் மேலூர் பிரதான சாலையில் இறங்கி சுமார் அரை கி. மீ தூரம் நடந்து செல்ல வேண்டும். இதனால் மாற்று திறனாளிகள், முதியோர்கள், கர்ப்பிணிகள் சிரமங்களை சந்தித்து வந்தனர். இதை தவிர்க்க பேட்டரி கார் சேவை இன்று தொடங்கப்பட்டுள்ளது. இதற்காக ரூ.15 லட்சம் செலவில் இரு பேட்டரி கார்கள் வாங்கப்பட்டுள்ளன. ஒரு காரில் ஓட்டுநர் உட்பட்ட 6 பேர் பயணம் செய்யலாம்.