
பெங்களூரு: கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை காரணமாக கர்நாடகா மாநிலம் தார்வாடில் உள்ள பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல மழை காரணமாக உத்தர கன்னட மாவட்டத்தில் உள்ள பள்ளிகள் மற்றும் அங்கன்வாடிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இடைவிடாத மழை காரணமாக தார்வாடு மாவட்டத்திற்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், துணை ஆணையர் திவ்ய பிரபு ஜி.ஆர்.ஜே இன்று (ஜூன் 12, 2025) அங்கன்வாடிகள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்துள்ளார்.