
சென்னை: வடபழனியில் ஒருங்கிணைந்த பேருந்து முனையம் மற்றும் வணிக வளாகத்துடன் கூடிய `வடபழனி பணிமனை வளர்ச்சி திட்டம்' மேற்கொள்ளப்பட உள்ளது. இதற்காக, ரூ.481.3 கோடியில் ஒப்பந்தம் வெளியிடப்பட்டுள்ளது.
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் மற்றும் தமிழக தொழில் துறை மேம்பாட்டு கழகம் இணைந்து உருவாக்கிய சிறப்பு நிறுவனமான சென்னை மெட்ரோ சொத்து மேலாண்மை நிறுவனம் சார்பில், வடபழனியில் ஒருங்கிணைந்த பேருந்து முனையம் மற்றும் வணிக வளாகத்துடன் கூடிய `வடபழனி பேருந்து பணிமனை வளர்ச்சி திட்டம்' மேற்கொள்ளப்பட உள்ளது. இதற்கான ஒப்பந்தம் ரூ.481.3 கோடியில் வெளியிடப்பட்டுள்ளது.