• June 12, 2025
  • NewsEditor
  • 0

டிஎன்பிஎல் நடப்பு சீஸனில் நேற்று இரவு நடைபெற்ற போட்டியில் லைகா கோவை கிங்ஸ், சீகம் மதுரை பேந்தர்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற மதுரை அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த கோவை அணிக்கு சற்று நல்ல தொடக்கம் கிடைத்தது.

ஷாருக்கான்

பவர்பிளே முடிவில் அந்த அணி 55 ரன்கள் எடுத்திருந்தது. ஆனால் மிடில் ஓவர்களில் அந்த அணி அடுத்தடுத்து விக்கெட்களை பறிக்கொடுத்தது. கேப்டன் ஷாருக்கான் மட்டுமே நிலைத்து நின்றார். மறுமுனையில் அவருக்கு ஆதரவு கிடைக்கவில்லை.

20 ஓவர்கள் முடிவில் கோவை அணி 5 விக்கெட்கள் இழப்புக்கு 169 ரன்கள் எடுத்தது. ஷாருக்கான் 44 பந்துகளில் 77 ரன்கள் எடுத்து, தன் அணி சற்று சவால் அளிக்க கூடிய ஸ்கோர் எடுக்க உதவினார். மதுரை அணி சார்பில் முருகன் அஷ்வின், சரவணன் ஆகியோர் சிறப்பாக பந்து வீசினர்.

மதுரை அணி

170 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மதுரை அணிக்கு அரவிந்த் மற்றும் சீதாராம் அருமையான தொடக்கத்தை அளித்தனர். 10 வது ஓவரில் தான் அந்த அணி முதல் விக்கெட்டை இழந்தது. கோவை அணியின் பெளலிங் மற்றும் ஃபீல்டிங் மிகவும் சுமாராகவே இருந்தது.

இதனால் மதுரை அணி 17.5 ஓவர்களிலேயே இலக்கை எட்டி 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அந்த அணிக்கு அதிகபட்சமாக அரவிந்த் 68 ரன்களும், அதிரடியாக விளையாடி மதுரை கேப்டன் சதுர்வேத் 23 பந்துகளில் 46 ரன்களும் சேகரித்தனர். இந்த சீஸனில் முதல் வெற்றியை மதுரை பதிவு செய்துள்ளது. சிறப்பாக ஆடிய அரவிந்த் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

மதுரை அணி அரவிந்த்

டிஎன்பிஎல் வரலாற்றில் வெற்றிகரமான அணியாக கருதப்படும் கோவை அணி இந்த சீஸனில் விளையாடிய 2 போட்டிகளிலும் தோல்வியடைந்துள்ளது. அந்த அணியின் நம்பிக்கை நட்சத்திரமான சாய் சுதர்சன் இல்லாதது அவர்களுக்கு பெரிய பின்னடைவாக உள்ளது.  

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *