
கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள ரவீந்திர நகர் பகுதியில் நேற்று போலீஸாருக்கும், ஒரு கும்பலுக்கும் இடையே மோதல் ஏற்பட்டதை அடுத்து, அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
ரவீந்திரநகர் காவல் நிலையம் அருகே நேற்று ஒரு கூட்டம் கூடத் தொடங்கியபோது, அது திடீரென வன்முறையாக மாறியது. அதிக எண்ணிக்கையிலான காவல்துறையினர் மீது அந்த கும்பல் கற்களால் தாக்கியது. இதனையடுத்து கும்பலைக் கலைக்க காவல்துறையினர் தடியடி மற்றும் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். இருப்பினும், சந்தோஷ்பூர் அருகே கூட்டம் மீண்டும் ஒன்றுகூடி கொல்கத்தா காவல்துறையினருடன் மோதியது.