• June 12, 2025
  • NewsEditor
  • 0

புதுடெல்லி: மத்​தி​யில் பிரதமர் நரேந்​திர மோடி தலை​மையி​லான அரசு, நேற்​றுடன் 11 ஆண்​டு​களை நிறைவு செய்​திருக்​கிறது. இந்த 11 ஆண்​டு​களில் மத்​திய அரசின் சாதனை​களை நாட்டு மக்​களிடம் விளக்​கும் வகை​யில் பாஜக ஆளும் மாநிலங்​களில் பல முக்​கிய நிகழ்ச்​சிகளை பாஜக தொடங்கி உள்​ளது. குறிப்​பாக பாஜக ஆளும் உ.பி.​யின் 75 மாவட்​டங்​களி​லும் பிரதமர் மோடி ஆட்​சி​யின் சாதனை​களை விளக்​கும் புகைப்​படக் கண்​காட்சி நடத்​தப்​பட்டு வரு​கிறது. இன்று ஜுன் 12 முதல் 14 வரை, விக் ஷித் பாரத் சங்​கல்ப்சபை கூட்​டங்​கள், கோட்ட அளவில் ஏற்​பாடு செய்​யப்​பட்​டுள்​ளன.

இவை அனைத்​தி​லும் சிறு​பான்​மை​யினரை கவரும் உத்​தியை நேற்று முதல் பாஜக கையாள தொடங்கி உள்​ளது. இதில், உ.பி.​யின் மசூ​தி​கள், தேவால​யங்​கள் மற்​றும் குருத்​து​வா​ராக்​கள் முன்​பாக சவு​பால் எனும் சிறப்​புக் கூட்​டங்​களை பாஜக நடத்​துகிறது. பிரதமர் மோடி​யின் 11 ஆண்டு கால சாதனை விளக்க விவாதங்​கள் இதில் நடை​பெற உள்​ளன.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *