
பெங்களூரு: கர்நாடக காங்கிரஸ் எம்.பி., 3 எம்எல்ஏ.க்கள் வீடுகளில் அமலாக்க துறை சோதனை நடத்தியது. கர்நாடகாவில் வால்மீகி பழங்குடியினர் வளர்ச்சி ஆணையத்தில் ரூ.187.3 கோடி ஊழல் நடந்ததாக அதன் கண்காணிப்பாளர் சந்திரசேகரன் கடந்த மே மாதம் குற்றம்சாட்டினார்.
இதற்கு உடந்தையாக இல்லாததால் தனக்கு நெருக்கடி கொடுக்கப்பட்ட‌தாக குற்றம்சாட்டிய அவர், தற்கொலை செய்துகொண்டார். இது தொடர்பாக, ஆணையத்தின் நிர்வாக இயக்குநர் ஜி.பத்மநபா உட்பட 11 பேர் கைது செய்யப்பட்டனர்.