
மேட்டூர்/ஈரோடு: ஈரோடு மாவட்ட எல்லையில் இருந்து சேலம் மாவட்டம் மேட்டூர் வரை 11 கிமீ. தொலைவுக்கு நடை பெற்ற ‘ரோடு ஷோ’வில் முதல்வர் ஸ்டாலின், சாலையில் நடந்தபடி, வழிநெடுகிலும் பொதுமக்கள், திமுகவினரைச் சந்தித்தார். அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. முதல்வர் ஸ்டாலின், ஈரோடு மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிகளுக்குப் பின்னர் சேலம் மாவட்ட எல்லையான பெரும் பள்ளம் கிராமத்துக்கு வேனில் வந்தடைந்தார்.
அவருக்கு சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் தலைமையில் செங்கோல் அளித்து, மாவட்டச் செயலாளர்கள் டி.எம்.செல்வகணபதி எம்.பி,எஸ்.ஆர்.சிவலிங்கம் உள்பட திமுகவினர் பிரம்மாண்டமான வரவேற்பு அளித்தனர். முதல்வருடன் அமைச்சர்கள் எம்ஆர்கே.பன்னீர்செல்வம், எ.வ.வேலு ஆகியோரும் உடன் வந்தனர்.