• June 12, 2025
  • NewsEditor
  • 0

விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக நாளை மறுநாள் (ஜூன் 14) திருச்சியில் ‘மதச்சார்பின்மை காப்போம்’ பேரணி நடக்க உள்ளது.

இந்தப் பேரணி குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தனது முகநூல் பக்கத்தில் குறிப்பிட்டுள்ள முக்கியமான அம்சங்கள் மற்றும் வேண்டுகோள்…

“திருச்சி என்பது மையப் பகுதி. நான்கு முனைகளில் இருந்தும் மக்கள் வந்துசேர எளிதாக இருக்கும் என்பதால் இந்தப் பேரணி திருச்சியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்தப் பேரணியில் அலங்கார ஊர்திகளுக்கு அடுத்ததாக கோட் சூட் அணிந்தவர்கள் வருவார்கள். அடுத்ததாக, சீருடை அணிந்த பெண்கள் அணிவகுத்து வருவார்கள்.

திருமாவளவன்

இந்தப் பேரணிக்கு வரும் அனைவரும் கட்டாயம் நீலச் சட்டை அணிந்து வர வேண்டும். இத்துடன் கட்சி மஃப்ளர் அணிந்து வர வேண்டும்” உள்ளிட்டவைகள் கூறப்பட்டுள்ளன. வி.சி.க நடத்தும் இந்தப் பேரணியின் முக்கியக் கொள்கையே மதசார்பின்மையை வலியுறுத்துவது ஆகும்.

அடுத்து ஆண்டு (2026), தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் நடக்க உள்ளது. இந்த நிலையில், அனைத்து கட்சிகளும், தேர்தல் வேலைகள், கூட்டணி பேச்சுவார்த்தை என பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறன.

நேற்று கூட, பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் திமுக கூட்டணியில் இருக்கும் ஒரு கட்சி அதிமுக – பாஜக மெகா கூட்டணியில் இணையும் என்று கூறியிருந்தார். இதற்கு, ‘திமுக கூட்டணியில் இருக்கும் ஒரு கட்சி கூட அதிமுக – பாஜக கூட்டணியில் அமையாது’ என்று திருமாவளவன் பதில் அளித்திருக்கிறார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *