
புதுடெல்லி: வழக்கு விசாரணையின்போது பெண் நீதிபதியை மோசமான வார்த்தைகளால் திட்டி அவமானப்படுத்திய வழக்கறிஞருக்கு விதிக்கப்பட்ட 18 மாத சிறை தண்டனையை குறைக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.
கடந்த 2015-ம் ஆண்டு கிழக்கு டெல்லியில் உள்ள கர்கர்டூமா நீதிமன்றத்தில் போக்குவரத்து விதிமீறல் தொடர்பான வழக்கு நடைபெற்றது. அப்போது, கட்சிக்காரருக்கு ஆதரவாக வாதடிய வழக்கறிஞர் சஞ்சய் ரத்தோட், வழக்கு ஒத்திவைக்கப்பட்டது தொடர்பாக கோபமடைந்து பெண் விசாரணை நீதிபதியை மோசமான வார்த்தைகளால் திட்டத் தொடங்கினார்.