
சென்னை/மேட்டூர்: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மேட்டூரிலிருந்து சென்னை வரை அரசு மருத்துவர்கள் பாதயாத்திரையை தொடங்கினர்.
மேட்டூர் அருகே விருதாசம்பட்டியை அடுத்த மல்லப்பனூர் பிரிவு சாலையில், மறைந்த மருத்துவர் லட்சுமி நரசிம்மனின் நினைவிடத்தில் இருந்து, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசு மருத்துவர்களுக்கான சட்டப் போராட்டக் குழு தலைவர் பெருமாள் பிள்ளை தலைமையில் மேட்டூரிலிருந்து சென்னை வரை பாதயாத்திரை நேற்று தொடங்கியது. செயலாளர் ஜெயக்குமார் மற்றும் மருத்துவர்கள் 20-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.