
விருதுநகர்: காரியாபட்டி அருகே பட்டாசு ஆலையில் நேற்று காலை நேரிட்ட வெடி விபத்தில் 3 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். மேலும் 3 பேர் காயமடைந்தனர். மதுரையைச் சேர்ந்த ராஜசந்திர சேகரன் என்பவருக்குச் சொந்தமான பட்டாசு ஆலை விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகேயுள்ளவடகரை கிராமத்தில் உள்ளது. இங்கு 30-க்கும் மேற்பட்ட அறைகளில் பேன்ஸி ரக பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. 60-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இங்கு பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று காலை ஓர் அறையில் எதிர்பாராதவிதமாக வெடி விபத்து ஏற்பட்டது. இதில், அந்தக் கட்டிடம் முழுவதும் இடிந்து தரைமட்டமானது. அங்கு பணியாற்றிக் கொண்டிருந்த தொழிலாளர்கள் கல்குறிச்சி சவுடம்மாள் (53), தண்டியனேந்தல் கருப்பையா (35) ஆகியோர் அந்த இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், முருகன் (45), பேச்சியம்மாள் (43), கணேசன் (43), மாரியம்மாள் (40) ஆகியோர் பலத்த காயமடைந்தனர்.