
நாமக்கல்: முருக பக்தர்கள் மாநாடு மூலம் திமுக அரசுக்கு முடிவுரை எழுதப்படும் என்று மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கூறினார்.
நாமக்கல்லில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: சீர்மிகு நகரத் திட்டத்தைத்தான் சிங்காரச் சென்னை என்று திமுகவினர் கூறுகின்றனர். மத்திய அரசின் திட்டங்கள் அனைத்தையும், மாநில அரசு செய்ததுபோல காட்டுவது திமுகவின் வேலை.