
திருநெல்வேலி: தமிழகத்தில் வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றிபெற்று, இபிஎஸ் தலைமையில் கூட்டணி ஆட்சி அமைக்கப்படும் என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
திருநெல்வேலியில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது : எங்கள் கூட்டணியில் மேலும் பல கட்சிகள் இணைய வாய்ப்புள்ளது. அதற்கான பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது. தேர்தலுக்கு இன்னும் நாட்கள் இருப்பதால் அதுகுறித்து பின்னர் தெரியவரும்.