• June 12, 2025
  • NewsEditor
  • 0

இந்தியா vs இங்கிலாந்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஜூன் 20-ம் தேதி இங்கிலாந்தில் தொடங்குகிறது.

புதிய கேப்டன் சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணியில் துணைக் கேப்டனாக ரிஷப் பண்ட் இடம்பெற்றிருக்கிறார்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் கடைசியாக ஆஸ்திரேலியாவுக்கெதிரான பார்டர் கவாஸ்கர் தொடரில் ஒரேயொரு அரைசதம் அடித்து ஏமாற்றம் தந்தார்.

அதே ஃபார்மை ஐ.பி.எல்லிலும் தொடர்ந்த பண்ட், மொத்தமாகவே ஒரு அரைசதம், ஒரு சதம் உட்பட 269 ரன்கள் மட்டுமே அடித்தார்.

இந்த நிலையில், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி, இங்கிலாந்துக்கெதிரான டெஸ்ட் தொடர் தொடங்குவதற்கு முன்பாக பண்ட்டுக்கு அறிவுரை வழங்கியிருக்கிறார்.

ரிஷப் பன்ட்

ரெவ்ஸ்போர்ட்ஸ் (Revsportz) ஊடகத்திடம் பேசிய கங்குலி, “ஆஸ்திரேலியாவை அவர் விளையாடிய விதம் எனக்குப் பிடிக்கவில்லை. நிறைய தேவையற்ற ஷாட்டுக்கு சென்றார்.

ஒவ்வொரு பந்துக்கும் பேட்டை சுழற்றிக் கொண்டிருந்தார். பந்து பிட்ச் ஆகி நகரும் கண்டிஷனில் அவ்வாறு நீங்கள் ஆடக்கூடாது.

சவுரவ் கங்குலி
சவுரவ் கங்குலி

இப்போது (இங்கிலாந்து தொடர்) பண்ட் தனது ஆட்டத்தைக் காட்ட வேண்டும். அவரிடம் மிகச் சிறந்த டிஃபென்ஸ் இருக்கிறது.

அதைத்தான் நான் பார்க்க விரும்புகிறேன். ஒவ்வொரு பந்துக்கும் பேட்டை சுழற்றாதீர்கள்.

பண்ட் ஒரு ஸ்ட்ரோக்-மேக்கர் என்பது எனக்குத் தெரியும், அதுதான் அவரது பலம். அதற்கேற்ப அவர் மாற்றியமைத்து விளையாட வேண்டும்” என்று அட்வைஸ் கொடுத்தார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *