
புதுடெல்லி: மேகாலயாவுக்கு தேனிலவு சென்ற போது தனது கணவர் ராஜா ரகுவன்சியை கொலை செய்ய திட்டம் தீட்டி கொடுத்ததோடு, கொலையை நேரில் பார்த்த குற்றச்சாட்டில் சோனம் ரகுவன்சி கைதாகி உள்ளார். இந்நிலையில், போலீஸ் விசாரணையில் தனது குற்றத்தை சோனம் ஒப்புக்கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த வழக்கை விசாரித்து வரும் சிறப்பு புலனாய்வு பிரிவு காவலர்களிடம் சோனம் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார். செவ்வாய்க்கிழமை அன்று இந்த வழக்கில் கைதாகி உள்ள ராஜ் குஷ்வாகா, ஆகாஷ், விஷால், ஆனந்த் ஆகியோர் தங்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டது குறிப்பிடத்தக்கது. >>விரிவாக வாசிக்க