
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல – ஆசிரியர்
பெங்களுரிலிருந்து மந்த்ராலயம் சென்று நவபிருந்தாவனம் தரிசனம் செய்ய இரவு பஸ்ஸில் நானும், என் கணவரும் புறப்பட்டோம்… காலை கோவிலில் தரிசனம் செய்து நவபிருந்தாவனம் பயணித்தோம்…
அனேகுந்தியில் அனுமான் பிறந்த அஞ்சனாத்ரி மலை ஏறி தரிசித்து துங்கபத்திரை நதிக்கரையில் உள்ள நவபிருந்தாவனத்தை தரிசித்தோம்.. ஆன்மீக சுற்றுலா பயணமாக உள்ளதே என்று பக்கத்தில் உள்ள யுனஸ்கோவின் உலக பாரம்பரிய இடம் என்று அறிவிக்கப்பட்ட ஹம்பி சென்றோம்..
இதிகாச தொடர்பிலும்,விஜயநகர பேரரசின் தலைநகராகக் இருந்த இந்த பகுதி மிக பிரம்மாண்டமாக இருக்கிறது…
விருபாக்ஷா கோவில் அழகு,அற்புதமான கட்டடக்கலை உலக பாரம்பரிய தலமாக உள்ளது…
விஜயவிட்டல கோவிலின் கட்டிடமும் அருமை.
நாம் பயன்படுத்தும் ஐம்பது ரூபாய் நாட்டின் பின்புறத்தில் இங்குள்ள தேரின் படம் அச்சடிக்கபட்டுள்ளது…

ஹம்பி பஜார் பிரம்மாண்டமான கடைத்தெருபகுதி.. தொன்மையான அழகை பார்க்கலாம்…

யானை தொழுவம் பிரம்மாண்டம்.
பதினொரு பிரம்மாண்டமான அரைக்கோள அறைகளைக் கொண்டுள்ளது. ஒவ்வொரு குழியும் ஒரேநேரத்தில் இரண்டு யானைகளை தங்கவைக்கும் அளவுக்குப் பெரியது.
தாமரை மஹால் அரசபெண்களின் இரண்டு மாடி கட்டடம்.. கட்டமைப்பின் வளைவுகள் தாமரையின் இதழ்களை ஒத்திருக்கின்றன..

கோட்டைகளும் வலிமையின் கோபுரமும் நீர்வாழ் உயிரினங்கள் மற்றும் பறவைகள் போன்ற வடிவமைப்புகளுடன் அழகாக பொறிக்கப்பட்டுள்ளன..
உக்கிர லஷ்மிநரசிம்மர், சாசுவேகாளு கணேஷா, கடலேகாலுகணேஷா, பிரசன்ன விருபாக்ஷா கோவில்கள் அற்புதம்..

கணக்கிலடங்காத விஜயநகர பிரம்மாண்டமான அற்புதங்களைபார்க்க உடலில் தெம்பு இருக்கும்போதே செல்ல வேண்டும். அக்டோபர்-பிப்ரவரி 2 நாட்கள் தங்கி பார்க்கலாம்.
-ஷகிலா சத்யன்
பெங்களூர்
My Vikatan-க்கு உங்களது `சுற்றுலா’ கட்டுரை

இனி வாசகர்கள் விகடன் அறிவிக்கும் மாதாந்திர தலைப்பை மையப்படுத்தி கட்டுரைகள் அனுப்பலாம்.
இந்த மாதத்திற்கான தலைப்பு – `சுற்றுலா’. சுற்றுலா என்கிற தலைப்பில் My Vikatanக்கு உங்களது கட்டுரை படைப்புகளை அனுப்பலாம். நீங்க சுற்றுலா போன அனுபவமாக இருக்கலாம், பார்க்க வேண்டிய தலங்களாக இருக்கலாம், சுற்றுலா போகும் போது செய்ய வேண்டிய ஏற்பாடுகள் குறித்த தகவல்களாகவும் இருக்கலாம். ஆனால், உங்களின் சொந்த படைப்பாக, இதுவரை எந்த தளத்திலும் வெளிவராத படைப்பாக இருக்க வேண்டும், புகைப்படங்களுடன் அனுப்பவேண்டும். தேர்வு செய்யப்படும் கட்டுரைகள் அனைத்தும் பிரசுரம் ஆகும்.
வாசகர்களை உற்சாகப்படுத்தும் நோக்கில், இந்த மாதம் அனுப்பப்படும் பயணக் கட்டுரைகளில் சிறந்த கட்டுரைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு பரிசுத் தொகை வழங்கப்பட உள்ளது.
பரிசுத்தொகை விவரம்:
-
முதல் பரிசு : ரூ. 2,500 (2 வெற்றியாளர்கள்)
-
இரண்டாம் பரிசு : ரூ. 1000 (5 வெற்றியாளர்கள்)
-
நினைவுப் பரிசு: ₹500 (10 வெற்றியாளர்கள்)
நினைவில் கொள்க:
-
நீங்க கட்டுரையை அனுப்ப வேண்டிய கடைசி நாள் ஜூன் 20, 2025
-
ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட கட்டுரைகளை அனுப்பலாம்.
-
உங்கள் படைப்புகளை: my@vikatan.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம்
-
விகடனுக்கு என்று பிரத்யேகமாக அனுப்பப்படும் கட்டுரைகள் மட்டுமே பரிசீலிக்கப்படும்
-
உங்கள் படைப்பை திருத்தவோ, பிரசுரிக்கவோ, நிராகரிக்கவோ முழு உரிமையும் விகடனுக்கு இருக்கிறது.
-
கட்டுரையின் தரத்தின் அடிப்படையில் வெற்றியாளர்கள் விகடன் நடுவர் குழுவால் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.