
திருநெல்வேலி: “தமிழக எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி சுயமாக சிந்திக்க கூடியவர். பாஜகவுடன் தற்போது கூட்டணி சேர்ந்துள்ள அவர், கடைசி வரை அவர்களுடன் இருப்பாரா என்பதே கேள்விகுறி” என்று தமிழக சட்டப் பேரவை தலைவர் மு.அப்பாவு கூறியுள்ளார்.
பாளையங்கோட்டையில் சுய உதவி குழுக்களுக்கு கடன் வழங்கும் முறையை வங்கிகளோடு இணைக்கும் திட்ட தொடக்க விழாவில் பங்கேற்ற அவர் பின்னர் செய்தியாளர்களிடம் கூறியது: “மத்திய அரசால் பாதிக்கப்பட்ட மாநிலமாக தமிழகம் உள்ளது. பொத்தாம் பொதுவாக ரூ.10 லட்சம் கோடி தந்தோம், ரூ.20 லட்சம் கோடியை தமிழகத்துக்கு தந்ததோம் என்று மத்திய அரசு சொல்கிறதே தவிர, எந்த திட்டத்துக்குகு நிதி ஒதுக்கி உள்ளது என சொல்ல மாட்டார்கள்.