
மதுரை: விருச்சுழி ஆற்றில் கருவேல மரங்களை வெட்டுவதற்கான டெண்டர் விவரங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய சிவகங்கை ஆட்சியருக்கு மதுரை அமர்வு உத்தரவு பிறப்பித்துள்ளது.
சிவகங்கை திருப்புத்தூரைச் சேர்ந்த சின்னையா உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் பொது நல வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார். இதில், சிவகங்கை மாவட்டம் பொன்னாங்குடி கிராமத்தில் அமைந்துள்ள விருச்சுழி ஆற்றில் முழுவதுமாக சீமை கருவேல மரங்கள் நிறைந்துள்ளன. சுமார் 100 ஏக்கர் பரப்பிலான ஆறு , கண்மாய் முழுவதும் சீமைக் கருவேல மரங்கள் நிறைந்துள்ளன.