• June 11, 2025
  • NewsEditor
  • 0

சமீபத்தில் ஒரு நபர் தனது விந்தணு தானம் மூலம் ஆயிரக்கணக்கான குழந்தைகளின் உயிரியல் தந்தை என்று சமூக ஊடகங்களில் கூறியதுடன் தனது வருமானம் குறித்தும் பகிர்ந்திருந்தார். அவர் மாதத்திற்கு ரூ.2.5 லட்சம் வரை கூடுதல் வருமானம் ஈட்டுவதாகக் கூறினார்.

இந்த விந்தணு தானம் மேற்கத்திய நாடுகளில் ஒரு நல்ல பொருள் ஈட்டும் தொழிலாகவும் கருதப்படுகிறது. ஆனால் சில இடங்களில் இது குறித்த தவறான புரிதல் நிலவி தான் வருகின்றன.

2012 ஆண்டு வெளியான விக்கி டோனர் திரைப்படம் இந்தியாவில் விந்தணு தானம் பற்றிய விஷயங்களை பிரபலப்படுத்தியது. விக்கி டோனர் படத்தை தொடர்ந்து ஹரிஷ் கல்யாண் நடிப்பில் ‘தாராள பிரபு’ என்று தமிழில் வெளியானதும் குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் விந்தணு தானம் குறைவாகவே நடக்கிறது. இந்த நடைமுறை பற்றிய புரிதல் குறைவாகவே உள்ளது. பதிவு செய்யப்பட்ட விந்தணு வங்கிகள் மற்றும் கருவுறுத்தல் மருத்துவமனையில் குறைவான மாதிரிகளையே நன்கொடையாக வழங்குகின்றனர். இந்தியாவில் விந்தணு தானம் சட்டப்பூர்வமாக உள்ளது.

இதன்படி விந்தணு தானம் செய்பவர்களுக்கு பணம் செலுத்தப்படுகிறது. இந்தியாவில் விந்தணு தானம் செய்பவர் ஒரு தானத்திற்கு தோராயமாக 500 ரூபாய் முதல் 2000 வரை பெறுகிறார்.

அவர்கள் பெறும் சரியான தொகை நன்கொடையாளரின் சுயவிவரம் மற்றும் அவர்களின் மாதிரி தரத்தை பொறுத்து மாறுகிறது. ஒரு விந்தணு தானம் செய்பவர் வாரத்திற்கு இரண்டு முறை தானம் செய்தால் ஒரு மாதத்திற்கு ரூ.4000 முதல் ரூபாய் 8000 வரை பெறலாம்.

டெல்லி, மும்பை, பெங்களூர் போன்ற பெரிய நகரங்களில் அதன் தேவையை பொறுத்து மாத வருமானம் அதிகமாக உள்ளது. 8000 முதல் 15 ஆயிரம் வரை பணம் பெரு நகரங்களில் செலுத்தப்படுகிறது.

வெளிநாடுகளில் குறிப்பாக அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ஆஸ்திரேலியா போன்ற இடங்களில் விந்தணு தானம் பொதுவாக, ஒரு மரியாதைக்குரிய தொழிலாகக் கருதப்படுகிறது.

அமெரிக்காவில் உள்ள சியாட்டில் விந்தணு வங்கியில், நன்கொடையாளர்கள் ஒரு தானத்திற்கு சுமார் $100 (தோராயமாக ரூ. 8,400) பெறுகிறார்கள். மாதந்தோறும் $1,500 (சுமார் ரூ. 1.26 லட்சம்) வரை வருவாய் ஈட்ட முடிகிறதாம்.

கலிஃபோர்னியா விந்து வங்கியில் தானம் செய்பவர்கள் ஒரு மாதிரிக்கு சுமார் $150 (தோராயமாக ரூ. 12,600) வருவாய் பெறலாம், சராசரி மாத வருமானம் $700 முதல் $1,200 வரை (சுமார் ரூ. 58,000 முதல் ரூ. 1 லட்சம் வரை) இருக்கும்.

விந்தணு மாதிரி

இந்த நாடுகளில் உள்ள தானம் செய்பவர்கள் சம்பளத்திற்கு கூடுதலாக, இலவச சுகாதார பரிசோதனைகள், கருவுறுதல் பரிசோதனைகள் மற்றும் சில சமயங்களில் வருடாந்திர உடல் பரிசோதனைகள் போன்ற கூடுதல் சலுகைகளைப் பெறுகிறார்கள்.

எனினும் தானத்துக்கான பணத்தை நிர்ணையிப்பது, நன்கொடையாளரின் பின்னணியையும் சார்ந்துள்ளது. அதாவது, வலுவான கல்வித் தகுதிகள் (மருத்துவம் அல்லது பொறியியல் பட்டம் போன்றவை) அல்லது குறிப்பிட்ட உடல் பண்புகள் (தோல் நிறம், நீல நிற கண்கள் அல்லது உயரம் போன்றவை) உள்ளவர்கள் அதிக விலைகளைப் பெறுகிறார்களாம். இது பெரும்பாலும் இந்திய தம்பதிகளிடையே இருக்கும் நிறம் மற்றும் குறிப்பிட்ட அம்சங்களுக்கான விருப்பம் காரணமாகும்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *