
எழுத்தாளர், சமூக தொழில்முனைவோர் என்ற பன்முக ஆளுமையாக அறியப்படும் திரு. ஸ்ரீராம் V அவர்களால் நிறுவப்பட்டது நாளந்தாவே ஃபவுண்டேஷன். இது 20 ஆண்டுகால சேவை பாரம்பரியத்தை கொண்ட இலாபநோக்கற்ற ஒரு அமைப்பாகும். பல விருதுகளை வென்றிருக்கும் இந்த சமூகசேவை அமைப்பானது, வசதியற்ற, நலிவுற்ற சமூகங்களைச் சேர்ந்த குழந்தைகள் மற்றும் வளரிளம் பருவத்தினருக்கு திறன் மேம்பாட்டை வழங்கும் நோக்கத்தோடு கலை வடிவங்களைப் பயன்படுத்தி வருகிறது.
புதியவற்றை கண்டறியும் ஆர்வம், படைப்பாக்கத்திறன், தைரியம் மற்றும் கனிவான நடத்தை ஆகியவற்றை வளர்த்தெடுக்கும் அனுபவங்களையும் மற்றும் பாதுகாப்பான கற்றல் அமைவிடங்களையும் உருவாக்குவதன் வழியாக சிறப்பான சேவையை நாளந்தாவே ஃபவுண்டேஷன் வழங்கி வருகிறது. நாளந்தாவே ஃபவுண்டேஷன் விருந்து மாற்றத்திற்கான ஒரு விருந்து என்ற தலைப்பில் நிகழ்வு ஒன்றை ஏற்பாடு செய்திருக்கிறது.
மாஸ்டர் செஃப் இந்தியா (தமிழ்) நிகழ்ச்சியின் நடுவரும், உணவு வரலாற்றியல் நிபுணருமான திரு. ராகேஷ் ரகுநாதன் அவர்களின் ஒத்துழைப்போடு நடைபெறும் இந்நிகழ்வு தனித்துவமானதாக இருக்கும். பார்க் ஹயாட் சென்னையின் தி அபார்ட்மெண்ட் அமைவிடத்தில், 2025 ஜூன் 14 சனிக்கிழமையன்று, மாலை 6:30 மணிக்கு கலந்துரையாடல் நிகழ்வோடு ஆரம்பமாகும். நாளந்தாவே, அதன் மூன்றாவது தசாப்தத்தில் நுழைகிற தருணத்தைக் கொண்டாடுகின்ற இந்நிகழ்வில், பங்கேற்கும் அனைவரும் சமூகத்திற்கு, குறிப்பாக வசதியற்ற சமூகங்களைச் சேர்ந்த குழந்தைகளை மேம்படுத்தும் நோக்கத்திற்காக தங்களது பங்களிப்பை வழங்குகின்றனர் என்பது இந்நிகழ்வின் சிறப்பை உயர்த்துகிறது.

இந்த மாலைநேர விருந்து நிகழ்வின் வழியாக திரட்டப்படும் நிதியானது, போதுமான வசதியற்ற பள்ளிகள், பராமரிப்பு இல்லங்கள் மற்றும் நலிவுற்ற சமூகங்களைச் சேர்ந்த குழந்தைகளுக்கு கலைகள் அடிப்படையிலான நலவாழ்வு செயல்திட்டங்களுக்கு ஆதரவளிக்க பயன்படுத்தப்படும். மனநலப்பாதிப்புகளிலிருந்து விடுபட்டு அவர்கள் குணமடைவதற்கும், அவர்களது உள்ளார்ந்த உணர்வுகளை தைரியமாக வெளிப்படுத்தவும் மற்றும் உணர்வுரீதியான நலவாழ்வை உருவாக்கிக் கொள்ளவும் நாளந்தாவே சிறப்பான திட்டங்களை செயல்படுத்துவதற்கு இது வழிவகுக்கும்.!