
பெங்களூரு: கர்நாடகா மாநிலம் பல்லாரி எம்.பி துக்காராம், பல்லாரி நகர எம்எல்ஏ நாரா பாரத் ரெட்டி, காம்ப்ளி எம்எல்ஏ ஜே.என்.கணேஷ் மற்றும் பல்லாரி கிராமப்புற எம்எல்ஏ நாகேந்திராவின் நெருங்கிய கூட்டாளி கோவர்தன் ரெட்டி ஆகியோரின் வீடுகளில் அமலாக்கத் துறை இன்று (ஜூன் 11) சோதனை நடத்தி வருகிறது. வால்மீகி ஊழல் வழக்கு தொடர்பாக இந்த சோதனைகள் நடைபெறலாம் எனக் கூறப்படுகிறது.
பல்லாரி மாவட்டத்தில் உள்ள எம்.பி, எம்எல்ஏக்களின் வீடுகளில் அமலாக்கத் துறை இன்று காலை முதல் ஒரே நேரத்தில் சோதனைகளை மேற்கொண்டு வருகிறது.