• June 11, 2025
  • NewsEditor
  • 0

ஹாய்! எப்படி இருக்கீங்க?

வாழ்க்கையில் சந்தோஷமாக இருக்க பணம் தேவையில்லைன்னு நிறைய பேர் சொல்லுவாங்க. அவங்ககிட்ட ஒரு பணக்கட்டை நீட்டுங்க, கண்டிப்பா யாரும் வேணாம்னு சொல்லவே மாட்டாங்க. காரணம், சமூகத்தில் வாழ பணம் ஒரு அடிப்படைத் தேவை.

பணம்

இன்றைய நாளில் உங்க கையில ஒரு கோடி ரூபாய் இருந்து, அதை நீங்க 8% வட்டி தர்ற ஒரு பிக்செட் டெப்பாசிட்டில் போட்டு வெச்சா, மாதா மாதம் ₹ 60,000 ரூபாயை எடுத்து மகிழ்ச்சியா வாழலாம்! நீங்க போட்ட முதல் – 1 கோடி ரூபாயும் குறையவே குறையாது! இதுதான் பணத்தை ஸ்மார்ட்டா வேலை வாங்குறது! ஆனா எல்லார்கிட்டேயும் ஒரு கோடி ரூபாய் இருப்பதில்லை அப்போ என்ன பண்ணலாம்?

ஒரு கோடி இல்ல, 5 கோடி ரூபாய் சேர்க்கணும்!

ஒரு கோடியே நல்ல தொகைதானே, ஏன் 5 கோடி சேர்க்கணும்னு கேக்குறீங்களா? அடுத்த 10 – 25 வருஷத்துக்கு நம்முடைய பணத்தைk கொஞ்சம் கொஞ்சமாக முதலீடு செய்ய ஆரம்பிச்சா, நாம் கண்டிப்பா ஒரு கோடி சேர்க்கலாம்.

ஆனா இன்னைலேர்ந்து 25 வருஷத்துல ஒரு கோடி ரூபாயின் மதிப்பு ரொம்ப குறைஞ்சு இருக்கும். அதிலிருந்து கிடைக்குற வட்டிக்கும் பெரிய பலனும் இருக்காது. அதனாலதான் நீங்க 25 வருஷத்துக்கு மேல பிளான் பண்ணும்போது 5 கோடி என்பது சரியான இலக்காக இருக்கும்!

5 கோடி சேர்க்க – ஒன்றைக் குறையுங்க, ரெண்டைப் பெருக்குங்க!

நீங்க வருங்காலத்தில் பணக்காரரா இருக்கப் போறீங்களான்னு தெரிஞ்சுக்க இந்த மூன்று முக்கிய அம்சங்கள் உங்க கிட்ட இருக்கான்னு பாருங்க. 

1 – தேவையற்ற செலவுகளைக் குறைச்சுட்டே வர்றது,

2 – வருமானத்தைப் பெருக்கிக்கொண்டே போவது,

3 – முதலீடு/சொத்துகளைச் சேர்த்துட்டே போறது.

என்ன மேற்கண்ட மூணுல எதைச் செய்யுறீங்க?, எதைச் செய்யலன்னு யோசிச்சீங்களா?, நீங்க எவ்ளோ சம்பாதிச்சாலும், தேவையற்ற செலவுகளைக் குறைக்கலைன்னா உங்களின் பணம் டாட்டா காட்டிட்டு போயிட்டே இருக்கும். சோ, சரியான விஷயங்களுக்குச் செலவு செய்வதே பணக்காரர் ஆவதற்கான முதல் தகுதி.

அடுத்து, உங்களின் வருமானம் வருஷா வருஷம் கூடிக்கிட்டே போகணும். புதுப்புது முயற்சிகள் செய்வது, தொடர்ந்து புது விஷயங்களைக் கற்று நம்ம திறமையை அதிகரிச்சுட்டே இருப்பது, எங்க மக்களுக்குத் தேவை இருக்குன்னு பார்த்து அதைப் பூர்த்தி செய்வது – இதெல்லாம் உங்க வருமானத்தைப் பெருக்கும்.

இப்போ செலவைக் குறைச்சு, வருமானத்தை அதிகரிச்சாச்சு, கையில் பணமும் தங்குது, அந்தத் தொகையை விலைவாசி உயர்வைத் தாண்டி வளரும் மியூச்சுவல் ஃபண்ட்ஸ் போன்ற நிதித் திட்டங்களில் முதலீடு செய்யணும்.

கையில் காசு இருந்தா அது பலனற்ற விஷயங்களுக்குக் கண்டிப்பா செலவாகும், அதனால மாதச் சம்பளம்/பிசினஸ் வருமானம் வந்தவுடனே ஆட்டோமேட்டிக்கா வங்கி கணக்குலேர்ந்து முதலீட்டுக்கு போற மாதிரி திட்டமிடணும். இதற்கு உதவுவதுதான் SIP – Systematic Investment Plan.

5 கோடி சேர்க்க மாதம் எவ்ளோ SIP முதலீடு பண்ணனும்?

உங்களுக்கு 12% ஆண்டுதோறும் வளர்ச்சி கிடைக்கும் பட்சத்துல, நீங்க மாதாமாதம் முதலீடு செய்ய வேண்டிய தொகை:

05 ஆண்டு – ₹ 6.5 லட்சம் 

10 ஆண்டு – ₹ 2.3 லட்சம்

15 ஆண்டு – ₹ 1.05 லட்சம்

20 ஆண்டு – ₹ 53,000

25 ஆண்டு – ₹ 28,000

இதுவே ஆண்டுதோறும், 10% முதலீட்டை அதிகரிச்சா, நீங்க முதலீடு செய்ய வேண்டிய மாத SIP தொகை

05 ஆண்டு – ₹ 5.4 லட்சம் 

10 ஆண்டு – ₹ 1.58 லட்சம்

15 ஆண்டு – ₹ 61,000

20 ஆண்டு – ₹ 26,000

25 ஆண்டு – ₹ 12,500

சோ, உங்களால மாதம் வெறும் ரூ. 12,500 முதலீடு பண்ண முடிஞ்சாலே ஒரு கோடீஸ்வரராக உங்களுடைய ஓய்வுக்காலத்தை ஜம்முன்னு ஜமாய்க்கலாம்!

இதற்கு மேலும் முதலீடு செய்ய முடிஞ்சா, நீங்க 10-20 வருஷங்களிலேயே 5 கோடி ரூபாயைக் கண்டிப்பா சேர்க்க முடியும். அதன் பிறகு நீங்க வேலைக்குப் போய்த்தான் சம்பாதிக்கணும்னு எந்த அவசியமும் இல்ல!

எங்க? எப்போ? எப்படி முதலீடு பண்ணுறது?

இப்படி உங்களுக்கு கேள்வி இருக்கத்தானே செய்யும்! மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செஞ்சு 5 கோடி சேர்க்கணுமா? SIP மூலம் நீங்க அதை எப்படிப் பண்ணலாம்னு கத்துக்கணுமா? விகடனின் ‘லாபம்’ நிறுவனத்தின் சேவையைப் பயன்படுத்தி நீங்க எப்படி இந்த இலக்கை அடையலாம்னு, வரும் ஞாயிறு, ஜூன் 15, 2025 அன்று ஆன்லைனில் சொல்லித்தரப் போறோம். 

வெபினார் தலைப்பு: 5 கோடி ரூபாய் நிதி சேர்ப்பது எப்படி?

நடைபெறும் நாள்: ஞாயிறு, ஜூன் 15, 2025

நேரம்: காலை 11 மணி – 12:30 மணி (இந்திய நேரம்)

இந்த நிகழ்ச்சி கொங்கு பகுதியை சேர்ந்தவர்களுக்கு மட்டுமே!

நீங்க கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர், நீலகிரி, கிருஷ்ணகிரி & தர்மபுரியைச் சேர்ந்தவரா? உங்களுக்கு மட்டுமே இந்த நிகழ்ச்சி பிரத்தியேகமா நடத்தப்படுது. (பிற ஊர்களுக்கு வரும் வாரங்களில் நிகழ்ச்சி நடத்தப்படும்!)

கொங்கு மக்களே! 5 கோடி சேர்ககும் திட்டத்தைப் பெற, இப்போவே ரெஜிஸ்டர் பண்ணுங்க: https://forms.gle/ynscrMF8kcAKsQmR9

பொறுப்புத் துறப்பு: விகடன் வெல்த் பிரைவெட் லிமிடெட்/லாபம், AMFI அமைப்பின் கீழ் பதிவு செய்யப்பட்ட மியூச்சுவல் ஃபண்ட் விநியோக நிறுவனமாகும் – ARN-310095. மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. முதலீடு செய்யும் முன் திட்டம் சார்ந்த அனைத்து ஆவணங்களையும் சரியாகப் படித்துப் பார்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. 

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3PaAEiY

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *