
புதுடெல்லி: வெளிநாடுகளுக்குச் சென்றுவிட்டு திரும்பிய எம்.பி.க்கள் குழுக்களுடன் பிரதமர் நரேந்திர மோடி நேற்று முக்கிய ஆலோசனை நடத்தினார். அப்போது, உலக நாடுகளின் தலைவர்கள் கூறிய கருத்துகள் தொடர்பாக எம்.பி.க்களுடன் பிரதமர் மோடி விவாதித்தார்.
கடந்த ஏப்ரல் 22-ம் தேதி காஷ்மீரின் பஹல்காமில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் கொடூர தாக்குதலை நடத்தினர். இதில் 26 சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்தனர். இதற்கு பதிலடியாக கடந்த மே 7-ம் தேதி ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் பாகிஸ்தானில் செயல்பட்ட 9 தீவிரவாத முகாம்களை இந்திய விமானப் படை அழித்தது. இந்தியாவின் தாக்குதலை சமாளிக்க முடியாமல் பாகிஸ்தான் ராணுவம் பணிந்தது. கடந்த மே 10-ம் தேதி இரு நாடுகளிடையே சண்டை நிறுத்தம் அமலுக்கு வந்தது.