• June 11, 2025
  • NewsEditor
  • 0

கிருஷ்ணகிரியில் நேற்று திராவிட இயக்கப் பேச்சாளரான நாஞ்சில் சம்பத் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் அமித் ஷாவின் சென்னை விசிட் குறித்து கேட்கப்பட்டது. அதற்கு அவர் பேசியதாவது…

“தமிழில் பேசத் தெரியவில்லை என்பது எனக்கு வருத்தமாக இருக்கிறது என்று அமித் ஷா கூறியது நாடகத்தின் ஒத்திகை. தமிழ் மொழிக்கு எதிராக சிந்திக்கும் குரூரமான சிந்தனை உடையவர் இந்தியாவின் உள்துறை அமைச்சர் அமித் ஷா.

நாஞ்சில் சம்பத்

யாராவது உயிர் தரமாட்டார்களா என்று..!

சமஸ்கிருதத்தில் இருந்து தான் தமிழ் பிறந்தது என்று கூறி 8 கோடி தமிழ் மக்களின் நெஞ்சில் ஈட்டி எறிந்தவர் இந்த உள்துறை அமைச்சர் அமித் ஷா. இப்போது செத்து கிடக்கும் பாஜக-விற்கு தமிழ்நாட்டில் யாராவது உயிர் தரமாட்டார்களா என்ற நப்பாசையில் அமித் ஷா இப்படி பேசியிருக்கிறார்.

திமுகவை அகற்றுவேன் என்று கூறியவர்களை காலமே விழுங்கியிருக்கிறது. இதற்கு நிறைய வரலாற்றுச் சாட்சிகள் உண்டு. திமுக என்பது கட்சி கிடையாது. அது ஒரு இயக்கம். திமுக உங்களை மாதிரி கும்பல் அரசியல் நடத்தும் கட்சி அல்ல; அது கொள்கை அடிப்படையிலான கட்சி. இந்தக் கட்சியை அழிப்பதற்கு ராணுவத்தாலேயே முடியாது. உங்களால் எப்படி முடியும்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3PaAEiY

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *