
சிவகங்கை: தமிழகத்தின் அடுத்த தலைமுறையை காப்பாற்ற திமுக ஆட்சியை அகற்ற வேண்டும் என்று பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா கூறினார். சிவகங்கை அருகே நகரம்பட்டியில் சுதந்திரப் போராட்ட வீரர் வாளுக்கு வேலி அம்பலம் பிறந்ததினத்தையொட்டி, அவரது சிலைக்கு பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா மாலை அணிவித்தார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: அந்தந்தப் பகுதி சுதந்திரப் போராட்ட வீரர்களின் சரித்திரத்தை 6-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படிக்கும் குழந்தைகளுக்கு கற்றுக் கொடுக்க அரசு ஏற்பாடு செய்ய வேண்டும்.