
பெரம்பலூர் / அரியலூர்: வாக்குப்பதிவு இயந்திரத்தை பாஜக தவறாக பயன்படுத்தினாலும், தமிழகத்தில் ஒரு இடத்தில் கூட அவர்களால் வெற்றிபெற முடியாது என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் எம்.பி தெரிவித்தார்.
பெரம்பலூரில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது:தமிழகத்தில் அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைத்து வலுவான கூட்டணி அமைக்க வேண்டும் எனும் அமித்ஷாவின் எண்ணம் இன்னும் கைகூடவில்லை. ஏற்கெனவே அவர்கள் கூட்டணியில் இருந்த பாமக, தேமுதிக கட்சிகள்கூட கூட்டணியில் இணைய தயக்கம் காட்டி வருகின்றன. தவெக-வை கூட்டணியில் இணைக்க போராடி வருகின்றனர். கூட்டணியை உருவாக்கவே இவ்வளவு பாடுபட வேண்டிய சூழ்நிலையில், ஆட்சியைக் கைப்பற்றுவோம் எனக் கூறுவது நகைப்புக்குரியது.