
சென்னை: புதுமையான மாற்றுதலுக்குரிய கடனுதவியை வழங்கி, சமூக- பொருளாதார மேம்பாட்டு தேவைகளுக்கான முதலீடுகளுக்கு உலக வங்கி உதவும் என்று எதிர்பார்ப்பதாக உலக வங்கி வணிக மையத்தை திறந்து வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார்.
சென்னை, தரமணியில் உலக வங்கியின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள நவீன உலகளாவிய வணிக மையத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்த தரமணி மையம் புதிய ஒத்துழைப்பு மண்டலங்கள் மற்றும் மேம்பட்ட டிஜிட்டல் உள்கட்டமைப்புடன் கூடிய அதிநவீன வசதியை வழங்குகிறது. இந்த மையத்தை திறந்து வைத்து முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: