
சென்னை: கட்டாயக் கல்வி உரிமைச்சட்டத்தின் கீழ் தமிழகத்துக்கு வழங்க வேண்டிய நிதியை சட்டரீதியாக வழங்கி கடமையை செய்ய வேண்டுமென மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ள சென்னை உயர் நீதிமன்றம், சமக்ர சிக்க்ஷா திட்டத்தில் இருந்து இந்த நிதியை நீக்குவது குறித்து பரிசீலிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது.
கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் ஏழை, எளிய மாணவர்களுக்கு 25 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. ஆனால் இந்த ஒதுக்கீட்டின் கீழ் இந்தாண்டுக்கான மாணவர் சேர்க்கை இதுவரை தொடங்கப்படவில்லை எனக்கூறி, கோவையைச் சேர்ந்த மறுமலர்ச்சி இயக்கம் அமைப்பின் நிர்வாகியான வே.ஈஸ்வரன், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.